தடாகம் அருகே இறந்த நிலையில் மயில் மீட்பு
- வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
- மயிலின் கழுத்தில் காயம் இருப்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
கவுண்டம்பாளையம்,
கோவை பகுதிகளில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மயில்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோவில் அடுத்துள்ள ராகவேந்திரா நகரில் இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பார்த்து, புகைப்படம் எடு த்து வனத்துறையினருக்கு தகவல் அளி த்தார்.
தக வலின் பேரில் அங்கு சென்ற வனத் துறையி னர் இறந்த மயிலை கைப்பற்றி விசார ணை செய்து வருகி ன்றனர். மயில் மின்சாரம் தாக்கி உயிரிழ ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோண த்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலின் கழுத்தில் காயம் இருப்பதால் யாராவது கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.