உள்ளூர் செய்திகள்
துறையூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் சஸ்பெண்டு- தலைமை கழகம் நடவடிக்கை
- கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டார்.
- அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.
சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
திருச்சி வடக்கு மாவட்டம், துறையூர் மத்திய ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மகேஸ்வரன், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.