என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspended"

    • பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
    • உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் திறப்பதிற்கான அனுமதி பெற புதுவை நகர அமைப்பு குழுமத்தில் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.

    விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகர அமைப்பு உதவியாளர் குமாரவேலு, பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

    மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கால தாமதமாக அளித்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த பெட்ரோல் பங்க்கு அனுமதிக்கு விண்ணப்பித்தவர் லஞ்சம் வாங்கியது குறித்து ஆதாரத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.

    இது தொடர்பான அறிக்கை தலைமை செயலருக்கு அனுப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி, குமாரவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி பணியாற்றி வந்தார்.

    10-க்கு உட்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட இந்த பள்ளியில் அந்தோணி ஒற்றை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர்.

    தொடர் புகாரின் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராம திலகத்திடம் முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்தோணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அருகாமையில் உள்ள இன்னொரு பள்ளி ஆசிரியரை பணியமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரா கூறும் போது, தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். ஆனால் அந்தோணியின் நடத்தையால் தற்போது 7 குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள். ஆகவே தலைமை ஆசிரியர் பிரச்சனையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவியருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.
    • இதையடுத்து பால் கிரேஸ் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வராக இருந்த பால் கிரேஸ் (வயது 55) கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இவர் மீது அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவியருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை, கல்லூரியில் சமூக நல்லி ணக்கத்தை பேணாமல் மாணவியர் மற்றும் அலுவலர்களு டன் சுமூகமாக செயல்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, பால் கிரேசை சஸ்பெண்ட் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று பால் கிரேஸ் திடீரென கல்லூரிக்கு வந்தார். அங்கிருந்த பொறுப்பு முதல்வர் பாரதியிடம் சஸ்பெண்ட் ஆர்டருக்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியுள்ளேன். அதனால் முதல்வர் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொறுப்பு முதல்வர் பாரதி, இதுபற்றி உடனடியாக கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தியை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது, நீதிமன்ற உத்தரவை தன்னிடம் வந்து தருமாறு பால் கிரேசிடம் கூறும்படி கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். இந்த விவரத்தை பால்கிரேசிடம், பொறுப்பு முதல்வர் பாரதி கூறினார்.

    இதையடுத்து பால் கிரேஸ் கல்லூரியை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தால் நேற்று சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. 

    • பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அம்பலவயல் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர், தன்னை 2 பேர் ஊட்டிக்கு கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

    சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அம்பலவயல் போலீசார் சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஊட்டிக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துள்ளனர். சிறுமியும் வந்தார்.

    பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபின், சப்-இன்ஸ்பெக்டர் பாபு, பெண் போலீஸ் பிரஷி ஆகியோர் சிறுமியை அழைத்து கொண்டு போலீஸ் வாகனத்தில் ஊட்டிக்கு வந்தனர்.

    ஊட்டியில் சிறுமி சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட லாட்ஜூக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் அம்பலவயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    செல்லும் வழியில் வாகனம் ஒரு இடத்தில் திடீரென நிறுத்தப்பட்டது.

    அப்போது ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசார் இறங்கி வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது. ஜீப்பில் சிறுமியும், சப்-இன்ஸ்பெக்டர் பாபுவும் மட்டும் தனியாக இருந்தனர்.

    அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தொடக்கூடாத இடங்களில் தொட்டதுடன், அதனை தனது செல்போனில் புகைப்படமும் எடுத்து வைத்து கொண்டார். இதனை அவர்களுடன் வந்த இன்ஸ்பெக்டரோ, பெண் போலீசோ கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த சிறுமி சம்பவம் குறித்து கண்ணூர் டி.ஐ.ஜி ராகுல் ஆர்.நாயரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனை இன்ஸ்பெக்டர் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாபுவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார். 

    • அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது 2-வது மகன் ஜெயபிரகாஷ். இவர் கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயபிரகாஷ் நகை, பணம், சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக, பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து இருந்தார்.

    சதாசிவம் கொடுத்த புகார் மனு தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு வந்திருந்த சதாசிவத்திடம், பெற்ற மகன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள். இது தவறு என்று அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதாசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தா ருமான செல்வராஜன் என்பவர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் செல்வராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரை சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது10).

    அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்நிலையில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ. புகாரி பேச்சுவார்த்தை நடத்திார். அதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாகவும், காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை பெற்று சென்று இறுதி சடங்கு செய்தனர்.

    இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    • இது அவருக்கு இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன் (வயது 45). வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட போலீஸ் செக்போஸ்ட் அருகே குப்பை கிடந்தது. அதை சுத்தம் செய்யுமாறு துப்புரவு ஆய்வாளர் குருசாமியும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தன் என்பவரும் சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால் கடைசிவரை அவர் துப்புரவு பணியாளர்களை வைத்து அந்த பகுதியை சுத்தம் செய்யவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் குருசாமியிடம் உடனடியாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அங்கு துப்புரவு பணியாளர் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. இந்நிலையில் வெங்கடேசன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அருண்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
    • நகைச்சுவையாளர் மன்றம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதல்மைல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் அருண்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர் நகைச்சுவையாளர் மன்றம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.

    இந்த நிலையில் இவர் பள்ளியில் முறையாக கற்பித்தல் பணியை மேற்கொள்ளாமலும், கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுதவிர பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து வருவதாகவும் அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் ஆளும் கட்சி பெயரை கூறி பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    இதையறிந்த தொடக்கக் கல்வி அலுவலர், கூடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரைகள் வழங்கியும், எச்சரித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் ஆசிரியர் அருண்குமாரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அருண்குமார், பள்ளியில் முறையாக கற்பித்தல் பணியை மேற்கொள்ளாமல் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரியிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததாகவும் புகார் வந்தது. அதன் பேரில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளனது.

    • பெரம்பலூர் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யபட்டார்
    • ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் கொடுத்த புகார் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர் செல்வக்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.


    • புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஷோபியா. இவருக்கும், தேனியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஷோபியா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கரூண் காரட் விசாரணை நடத்தினார். அப்போது புகார் கொடுக்க வந்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ரூ.1500 வாங்கியது தெரியவந்தது. இதன் அறிக்கையை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னியிடம் சமர்ப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியை டி.ஐ.ஜி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரத்தை செலுத்த சென்றார். வங்கி அதிகாரிகள் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்தபோது, அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 7 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வியாபாரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணத்தை அவரிடம் கொடுத்தது எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான ஜிஷாமோள் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அதைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஆனால், கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. ஜிஷாமோள் இதற்கு முன்பு மாராரிக்குளம் பகுதியில் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்தே அவர் எடத்துவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.

    இந்தநிலையில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிஷாமோள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரித்தால் பல தகவல்கள் வெளிவரும் என அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • ஸ்ரீரெங்கநாததுரை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீரெங்கநாததுரை. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஆவினுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் நெல்லை ஆவினில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர், தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளர் ஸ்ரீரெங்கநாததுரையை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ×