உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள்.


19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் கோரிக்கை

Published On 2022-07-04 06:39 GMT   |   Update On 2022-07-04 06:39 GMT
  • காது கேளாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
  • டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 1 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட ௧௯ கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையில் ஏராளமானோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கூட்டமைப்பில்நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க வாய்ப்பு வழங்கவேண்டும். டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 1 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை மாற்றுத்திறனாளி துறை மூலம் மாற்றி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

சைகை மொழி பெயர்ப்பாளரின் வீடியோ பட வடிவமைப்பை பெரிதாக அரசு செய்தி தொலைக்காட்சியில் கொண்டு வரவேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு துறை அலுவலகங்களில் சைகை மொழியை அமுல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் கீழ் பசுமை வீடு வழங்கவேண்டும் என்பது உள்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News