உள்ளூர் செய்திகள்

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2023-05-17 09:17 GMT   |   Update On 2023-05-17 09:17 GMT
  • பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
  • குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்தனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

திரவுபதி அம்மன் கோயில தீமிதி திருவிழாவை முன்னிட்டுகோவத்தகுடி அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் கிராமவாசிகள் இறங்கி தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

ஏற்பாடுகளை கரம்பை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News