உள்ளூர் செய்திகள் (District)

தாய்மார்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரியில் தாய்மார்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

Published On 2023-08-06 09:51 GMT   |   Update On 2023-08-06 09:51 GMT
  • 20 நபர்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
  • டாக்டர் பாபு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினார்.

திருத்துறைப்பூண்டி:

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ரோட்டரி டெல்டா சங்கம் சார்பாக 20 நபர்களுக்கு மதர் ஹார்லிக்ஸ் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கவாசகம் வரவேற்று பேசினார். இன்னர்வீல் சங்கம் சார்பாக உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டது. தலைவி ராஜேஸ்வரி, செயலாளர் வினோதா, முன்னாள் தலைவி கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சங்க மருத்துவ சேர்மன் டாக்டர்பாபு கலந்து கொண்டு தாய்ப்பால் மகத்துவம் குறித்து பேசினார். தலைவர் மாணிக்கவாசகம், செயலர் அகிலன், பொருளாளர் விஜய்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News