தஞ்சையில் தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க கழகம் சார்பில் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நீட் தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்காத தமிழக கவர்னர் பதவி விலக வேண்டும்.
தஞ்சாவூர்:
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட திராவிட கழக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பாக ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றி குமார் தலைமை தாங்கினார்.
மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்காத தமிழக கவர்னர் பதவி விலக வேண்டும்.
நீட் தேர்வை உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில மாணவர் கழக செயலாளர் சௌந்தர பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தஞ்சை மாநகர இளைஞர் அணி தலைவர் பிரகாஷ், மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் ரொனால்ட் சரண், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மகேந்திரன், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் விடுதலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.