உள்ளூர் செய்திகள்

யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

சிவகிரி அருகே தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-04-22 08:05 GMT   |   Update On 2023-04-22 08:05 GMT
  • தேவிபட்டணத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
  • தி.மு.க. நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் சக்தி விநாயகர் கோவில் முன்பு புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.கிளைச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி, மாடக்குட்டி, கோபால், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News