உள்ளூர் செய்திகள்

தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க. மூத்த உறுப்பினர்களுக்கு ரூ.40 கோடி பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது

Published On 2023-10-26 06:39 GMT   |   Update On 2023-10-26 06:39 GMT
  • தேனி மாவட்டம் கம்பத்தில் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 1, 100 பேர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
  • பெரியார், அண்ணா, கலைஞர் ஆகி யோரை உங்கள் வடிவில் பார்க்கிறேன். வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பத்தில் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 1, 100 பேர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.கம்பம் நகர தி.மு.க. (வடக்கு) செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார். நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த உறுப்பினர்க ளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழி வழங்கி பேசியதாவது:-

அமைச்சராக பொறு ப்பேற்று தேனி மாவட்ட த்திற்கு முதன்முறையாக வந்துள்ளேன். கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் மூத்த உறுப்பின ர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட ங்களில் சுற்றுப்பயணம் செய்து ரூ.40 கோடி வரை பொற்கிழி வழங்கியு ள்ளோம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகி யோரை உங்கள் வடிவில் பார்க்கிறேன். வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது.

இதற்கு நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேர்தல் பணிக்குழு உறுப்பினர் செல்வேந்திரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கம்பம் பாவலர் படிப்பகம் அருகே தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டி ருந்த மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தையும் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News