உள்ளூர் செய்திகள் (District)
கோத்தகிரியில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டிக்கு படுகாயம்
- தோட்டத்தில் வேலை பார்த்தவரை தும்பிக்கையால் தாக்கியது
- ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் தீவிர சிகிச்சை
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடகெங்கரை மந்தட்டியைச் சேர்ந்த செவனன் மனைவி வெள்ளையம்மாள் (வயது 63). இவர் நேற்று காலை தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்தார்.
அப்போது புதர் மறைவில் இருந்து திடீரனெ வெளியே வந்த ஒரு காட்டுயானை துதிக்கையால் தாக்கிவிட்டு சென்றது. இதில் வெள்ளையம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவரை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.