உள்ளூர் செய்திகள்

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

தஞ்சை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

Published On 2023-01-07 10:50 GMT   |   Update On 2023-01-07 10:50 GMT
  • மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
  • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மேலவீதியில் கல்யாண சுந்தரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ். அருணபாஸ்கர் தலைமை தாங்கினார். நிர்வாக குழு செயலர் ஆர். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

முன்னதாக அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கே. ரமேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோலப்போட்டிக்கு நிர்வாக குழு உறுப்பினர் அனிதா அருணபாஸ்கர் நடுவராக செயல்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதே போல் கலை நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரிய -ஆசிரியைகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 

Tags:    

Similar News