உள்ளூர் செய்திகள்

தான்தோன்றி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-11-11 10:12 GMT   |   Update On 2022-11-11 10:12 GMT
  • மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
  • அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

கோபி:

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு  நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா 6-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 7-ந் தேதி கணபதி பூஜையும், 8-ந் தேதி பவானி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 9-ந் தேதி யாகசாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 10-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 7 மணிக்கு நடந்தது.

அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கோ தரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

Tags:    

Similar News