உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பலி

Published On 2022-06-09 08:04 GMT   |   Update On 2022-06-09 08:04 GMT
  • மின்சாரம் தாக்கியதில் வட மாநில வாலிபர் பலியானார்.
  • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஈரோடு:

உத்திரபிரதேச மாநிலம் மவு மாவட்டம் அடரி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஷனேகி (43). இவர் கடந்த 3 வருடமாக ஈரோட்டில் தங்கி கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று நாராய–ணன்வலசு பகுதியில் மரம் அறுக்கும் கட்டர் மிஷினில் மரகதவு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலணி அணியாமல் வேலை பார்த்துக்கொண்டி–ருந்தார்.

அப்போது திடீரென ராம்ஷனேகியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராம்ஷனேகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News