- திருமணமாகி சில மாதங்களி லேயே இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
- இந்த நிலையில் பொலவ காளி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நந்தினி விஷம் குடித்து விட்டார்.
கோபி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்த வர் நந்தினி (வயது 24). இவருக்கும் கோவையை சேர்ந்த வேலுமணி என்பவ ருக்கும் கடந்த 4 ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமாகி சில மாதங்களி லேயே இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நந்தினி மனம் உடைந்து காண ப்பட்டார்.
இந்த நிலையில் பொலவ காளி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நந்தினி விஷம் குடித்து விட்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாப மாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ. திவ்யா பிரியதர்சினி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன் ஆகியோரும் தொடர்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.