உள்ளூர் செய்திகள்

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-06-09 08:00 GMT   |   Update On 2022-06-09 08:00 GMT
  • பெருந்துறை அருகே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
  • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பெருந்துறை:

ஈரோடு சென்னப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் சங்கர் (வயது 24). இவர் தனது தந்தை இறந்த பின்பு அவர் நடத்தி வந்த பேக்கரிக்கு தேவையான மொத்த பொருட்களை விற்பனை செய்யும் கடையை கடந்த 18 வருடங்களாக பெருந்துறை-காஞ்சிகோயில் ரோடு பகுதியில் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் தனது தாய் மற்றும் அண்ணனிடம் அடிக்கடி புலம்பி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது தாய்க்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். மறுநாள் காலை வரை அருண்சங்கர் வீட்டிற்கு வராததால், அவரது தாய் அவருக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை.

உடனடியாக குடும்பத்தினர் கடைக்கு வந்து பார்த்த போது கடை சட்டர் உள்புறமாக பூட்டி இருந்தது.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருண் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இது தொடர்பாக தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News