உள்ளூர் செய்திகள் (District)

நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவுa

Published On 2024-08-23 09:30 GMT   |   Update On 2024-08-23 09:31 GMT
  • கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது.
  • குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

மதுரை:

தஞ்சாவூர் மாவட்டம் உடைலூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது. இந்த குளங்களில் குளங்களில் மீன் பிடிப்பதற்கான குத்தகை ஏலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்தினார். ஆனால் விதிகளை பின்பற்றாமல் விடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோவில்களில் இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்க ஏலம் விடப்படுகிறது. ஆனால், இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்காமல் வணிக நோக்கில் பல்வேறு வேதியியல் பொருட்களை கலந்து மீன்களை பெருக்குகின்றனர்.

மேலும், அப்பகுதி மக்கள் குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே நீரின் தரம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குளத்து நீரையே குடிநீராக பயண்படுத்தினர். தற்போது, குளத்து நீரை கால் நடைகள் கூட குடிக்க முடியவில்லை. இந்த நிலை ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது. கழிவு நீர் குப்பைகள் கொட்டப்படுகிறதா, நீர் நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தஞ்சாவூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மீன் வளத்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News