சங்கராபுரம் அருகே இறுதி ஊர்வலத்தில் வெடி விபத்து:7 பேர் காயம்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஜெயமேரி என்பவர் இறந்து போனார்
- இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஜெயமேரி என்பவர் இறந்து போனார். இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர். அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் நாட்டு வெடிகளை வெடித்து கொண்டே இறுதி ஊர்வலத்தின் முன்பாக சென்றார்.அப்போது மொத்தமாக வைக்கப்பட்டிருந்த வெடிகளில் எதிர்பாராதவிதமாக தீ பட்டது. இதில் அனைத்து வெடிகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. இதனால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த கிருபை (வயது 13) அடைக்கலமேரி (50), செல்வி (39), கன்னிமேரி (55), ரஞ்சித் (15), கோவிந்தன் (50), மைக்கேல் (25) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெடி விபத்து குறித்து ரிஷிவந்தியம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.