என் மலர்
நீங்கள் தேடியது "injury"
- இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
- தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சீனிவாசபுரம் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மேலவீதியை சேர்ந்த ரகுவரன் (22) மற்றும் அவருடைய சகோதரர் ராஜா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர்களிடம் கந்தசாமி கேட்ட போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி மற்றும் ராஜா ஆகிய 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கந்தசாமி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் ராஜா மற்றும் ரகுவரன் மீது வழக்குப்பதிவு செய்து ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.
- காயமடைந்தவர்கள் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 6 மாணவ, மாணவிகளுடன் பள்ளி தாளாளர் செய்யது முகமது (வயது 35), ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோராவை சுற்றிப்பார்க்க வந்தனர்.
கடந்த 29-ந் தேதி ஒரு வேனில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் வந்தனர். வேனை பள்ளி தாளாளர் செய்யது முகமது ஓட்டினார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.
இதில் செய்யது முகமது, ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு செய்யது முகமது உயிரிழந்தார். ஆசிரியைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகள்.இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆசிரியரின் இறப்பு கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சத்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- ஆற்றில் தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் டிரைவருக்கு சிறிய காயம்.
பேராவூரணி:
பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் சாலையில் பூக்கொல்லை அருகே பூனைக்குத்தி காட்டாறு செல்கிறது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.
இது குறுகிய பாலமாக இருப்பதால் பருவ மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று வீரியங்கோட்டையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லோடுஆட்டோ பாலத்தில் வரும்போது எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்தது.
ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.
எனவே மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக தடுப்பு கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது.
- இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் அஞ்சலி, பிரவீன், தமிழ்ச்செல்வன், பிரவீனா ஆகிய 4 பேரையும், நேற்று மாலை அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் கடித்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.
மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
- விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 67).
இவர் சேந்த மங்கலத்தில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். தனது உணவகத்தில் இருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு தினமும் அவர் உணவு பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று திருவாரூர் கடை தெருவிற்கு சென்று வீட்டிற்கு தேவை யான காய்கறிகளை வாங்கிக் கொண்டு சேந்தமங்க லத்திற்கு வந்துள்ளார்.
அங்கு அவரது உணவகத்திலிருந்து உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று கொடுத்துவிட்டு, பேக்கரி வாசலில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக திருவாரூர்-மயிலாடு துறை சாலையில் சென்றுள்ளார்.
அப்போது திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டனர்.
விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.
- இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்
கடலூர்:
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு நேற்று தனியார் பஸ்சை செஞ்சியை சேர்ந்த சிவா (வயது 26) என்பவர் பயணிகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிப்பர் லாரி பிரேக் அடித்ததால் பின்னால் வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழுந்து பலத்த சத்தத்துடன் லாரி மீது மோதி நின்றது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்து பஸ்ஸில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் முருகேசன் (வயது 50) கலைவாணி (வயது 36) சுகுணா (வயது 20) மாரியம்மாள் (33), மணிமாறன் (50), பிருந்தாவதி (65), மோகன் (39), விஜயலட்சுமி (49), சக்திவேல் (47), ராஜேந்திரன் (58), பார்த்திபன் (35), முருகானந்தம் (42), தாயம்மாள் (40) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் - புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சம்பவத்தன்று அருள் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூரை சேர்ந்தவர் முருகன் அருள் (வயது 29). அவரது மனைவி வேண்டாமிர்தம்(28) . இவர்களது மகன் வெற்றி(8). சம்பவத்தன்று அருள் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அசோகபுரி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அருள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் தவறி கீழே விழுந்த அருள், அவரது மனைவி வேண்டாமிர்தம், மகன் வெற்றி ஆகியோர் படுகாயம் அடைந்தனர், படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இது குறித்து புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.
- வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவுடன் இணைந்து ஜோதி அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசை மூலம் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகன ஓட்டுனர்களிடம், பொதுமக்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்த விதிகளை விளக்கி கூறி பறை இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலை விதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.
இரவில் வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.
மேலும், அவ்வழியாக வந்த இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டினார்.
விழாவில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பறை இசைத்து பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலை பாதுகாப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார்களையும், ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளையும் பொதுமக்கள் பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, அறக்கட்டளை மாணவ தன்னார்வலர்கள் ஆர்த்தி, காயத்ரி ராமச்சந்திரன், பூவிழி வீரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- ஒரு டப்பாவில் அடைத்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.
- மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.
சீர்காழி:
சீர்காழி இரணிய நகர் பகுதியில் பொது குடிநீர் குழாய் அருகே இன்று சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்த படி சீறிக் கொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடி நபர் சீர்காழியை சேர்ந்த பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி அங்கு சென்ற பாண்டியன் நல்ல பாம்பினை லாவகமாக பிடித்தார்.
அப்போது பாம்பின் வால் பகுதியில் முள் குத்தி காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட பாண்டியன் அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.
பிடிபட்ட பாம்பினை ஒரு டப்பாவில் அடைத்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.
அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் தகவல் தெரிவித்தார்.
மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.
சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டார்.`
- கிராமமக்கள் 10 பேரை மரத்தில் இருந்த கதண்டு பூச்சிகள் கடித்துவிட்டன.
- மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுவாமிமலை:
திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமாட்சிபுரத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். நாள்தோறும் அவர்கள் காமாட்சிபுரத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.
அதன்படி, இன்று வழக்கம்போல் பள்ளிக்கு பந்தநல்லூர் சாலையில் குடோன் அருகே உள்ளம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது சுமார் 20 மாணவ- மாணவிகள் மற்றும் அவ்வழியாக சென்ற கிராமமக்கள் 10 பேரை மரத்தில் இருந்த கதண்டு பூச்சிகள் கடித்துவிட்டன.
இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோணலபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரையில் இன்று அதிகாலை விபத்தில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
- டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் முதல் கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.
மதுரை
மதுரை மேலமாசிவீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் மினி வேனில் கும்பகோணத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். வேனில் 10 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரை அருகே உள்ள பாண்டிக்கோவில் ரிங் ரோட்டில் மினி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அதே வேகத்தில் சாலை தடுப்பில் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது.
வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். நள்ளிரவு என்பதால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை. அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் மினி வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 16 பேரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்த தால் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வேப்பந்தட்ையில் வீட்டின் மேற்கூறை விழுந்து 4 பேர் காயம் அடைந்தனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது41). விவசாயியான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது மனைவி காமாட்சி, உறவினர்கள் அரசலூரை சேர்ந்த கண்ணன், சங்கர் ஆகிய 4 பேரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சி திடீரென உதிர்ந்து கீேழ விழுந்தது. அதில் 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.