உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-04-29 09:48 GMT   |   Update On 2023-04-29 09:48 GMT
  • அக்கம்பக்கத்தினர் சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
  • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுவாமிமலை:

சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள்கோவில் புதுதெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42) விவசாயி.

இவர் தனது மனைவி வினோதினி (35) மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது.

இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு பூந்தோட்டத்தில் மது அருந்திவிட்டு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு அங்கேயே படுத்துவிட்டார்.

இதனை கண்ட அக்கம்ப க்கத்தினர் சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News