உள்ளூர் செய்திகள் (District)

ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலி

Published On 2023-10-14 09:38 GMT   |   Update On 2023-10-14 09:38 GMT
  • கிருஷ்ணகிரி அருகே ஆந்திரா எல்லையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
  • வனத்துறையினர் யானை காட்டுக்குள் விரட்ட ஏற்பாடு

கிருஷ்ணகிரி அடுத்துள்ள காளிகோவில் அருகே ஆந்திர மாநில எல்லையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி லட்சுமணன் வயசு (60), என்பவர் உயிரிழந்துள்ளார். இரவு 12:30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காளி கோயில் அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள பொம்ம தேசகொள்ளை என்ற கிராமம் உள்ளது. இங்கு லெட்சுமணன் மனைவி வீரம்மா உடன் நெல் வயல் காவலுக்கு நேற்று இரவு சென்று உள்ளார்.

காவல் இருந்த போது ஒரு பகுதியில் மனைவி தீ வைத்து விலங்குகள் வரமால் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். விவசாயி லெட்சுமணன் அங்குள்ள தென்னை மரத்தின் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை விவசாயியை தாக்கி மிதித்து கொன்றது. இது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் சென்று யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கந்திகுப்பம் போலீசார் விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ண கிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவ மனைக்கு அனுப்பி உள்ளனர்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி யுள்ளது

Similar News