உள்ளூர் செய்திகள் (District)

செங்கோட்டை அருகே விவசாயிகள் மேளா

Published On 2023-03-22 08:19 GMT   |   Update On 2023-03-22 08:19 GMT
  • நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கினார்.
  • மண்வளம் பேணுதல் பற்றிய சிறப்பு பயிற்சியை முகுந்தா தேவி நடத்தினார்.

செங்கோட்டை:

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை மண்வளம் பேணுதல் பற்றியும், மண்ணின் முக்கியத்துவத்தை அறியும் பொருட்டும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மண்வள அட்டை விழிப்புணர்வு பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. செங்கோட்டை வட்டாரம் கற்குடி கிராமத்தில் விவசாயிகள் மேளா நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கினார்.

செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் வரவேற்றார் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு முகுந்தா தேவி மண்வளம் பேணுதல் பற்றிய சிறப்பு பயிற்சியை நடத்தினார். அட்மா திட்டத்தின் வட்டார மேலாளர் செல்வகுமார் தொழில்நுட்ப உரையாற்றினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்து பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

தலைமை உரை ஏற்று வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் பேசும்போது, மண் ஆய்வு செய்தலின் அவசியமும், மண் ஆய்வு பரிந்துரைப்படி உரம் இடுதலும், இனி வரும் காலங்களில் விவசாயிகளிடம் கட்டாயமான ஒன்றாகி விடும் என்பதோடு மண் ஆய்வுப்படி உரம் இடுவதால் விவசாய செலவினை குறைப்பதோடு ரசாயன உரங்களின் விரையத்தையும் தவிர்க்கலாம் என பேசினார். நூற்றுக்கும் மேற்பட்ட கற்குடி பகுதி விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News