- பல்வேறு மாவட்டங்களில் இருந்து சன்மார்க்க சான்றோர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே ஜோதி நகரில் வள்ளலார் கோவிலில் சித்திரை பௌர்ணமி திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காலை 6 மணி அளவில் அகவல் பாராயணம், திருவிளக்கு பூஜை, சன்மார்க்க கொடியேற்றுதல், அருட்பா பாடல்கள் மற்றும் சன்மார்க்க சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடலூர் மாநில தலைமைச் சங்க பொருளாளர் நஞ்சுண்டன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரியை சேர்ந்த சிவகுமார் தலைமை தாங்கினார். அரசு வழக்கறிஞர் முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநிலத் தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் மாரண்டஅள்ளி சன்மார்க்க சங்க துரைசாமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சன்மார்க்க சான்றோர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாரண்டஅள்ளி ஜோதி நகரை சேர்ந்த வள்ளலார் கோவில் நிர்வாகிகள் நஞ்சுண்டன் மாரியம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.