- புரவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் நாகை ராஜரா ஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா, புரவலர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளியின் ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவருமான வேதரெ த்தினம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளரும் தொழில் அதிபருமான சண்முகம், வேதாரண்யம் அரசு கலை கல்லூரி பேராசிரியர் பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராசேந்திரன், ஆனந்தராசு ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிலவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் நாகை ராஜரா ஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மாணவர்க ளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் வழங்கினர். முடிவில் ஆசிரியர் செந்தமிழன் நன்றி கூறினார்.