உள்ளூர் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்புக்காக ஆங்கிலம் தெரிந்த 32 போலீசார் சென்னைக்கு புறப்பட்டனர்

Published On 2022-07-25 09:51 GMT   |   Update On 2022-07-25 09:51 GMT
  • உலகம் முழுவதிலும் இருந்து விளையாட்டு வீரர்கள் வருகின்றனர்.
  • வெளிநாட்டு வீரர்களுக்கு வழிகாட்டும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சேலம்:

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. உலகம் முழுவதிலும் இருந்து விளையாட்டு வீரர்கள் வருகின்றனர். இவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஆங்கிலம் நன்கு தெரிந்த போலீசார் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெளிநாட்டு வீரர்களுக்கு வழிகாட்டும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் போலீஸ் உதவி கமிஷனர் பாபு தலைமையில் 32 போலீசார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப் பட்டுள்ளது. இவர்கள் இன்று போலீஸ் வாகனத்தில் சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களுடன் வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் 10 பேர் சென்றனர். விளையாட்டு போட்டிகள் முடியும் வரை அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Tags:    

Similar News