உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகத்தை எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் திறந்து வைத்தார்

Published On 2022-10-02 09:36 GMT   |   Update On 2022-10-02 09:36 GMT
  • தனி கல்வி அலுவலகம் நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான அலுவலகம் கடந்த காலங்களில் சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்தது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலகம் தலைமை இடமாக இயங்கி வந்தது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட தனி கல்வி அலுவலகம் நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் இடைநிலை கல்வி அலுவலராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அலுவலகத்தை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகியும் ரோட்டரி சங்க தலைவருமான சக்திவேல், தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, மாவட்ட கல்வி ஆய்வாளர் இளமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News