உள்ளூர் செய்திகள் (District)

இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

செங்கோட்டை அருகே இலவச கண்பரிசோதனை முகாம்

Published On 2022-08-01 09:05 GMT   |   Update On 2022-08-01 09:05 GMT
  • செங்கோட்டை அருகே இலவச உடல்பரிசோதனை, இலவச கண்பரிசோதனை, பல் பரிசோதனை முகாம் நடந்தது.
  • முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா்.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் வல்லம் ஷிபா மெடிக்கல், கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச உடல்பரிசோதனை, இலவச கண்பரிசோதனை, பல் பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமில் கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை அறக்கட்டளை பொறுப்பாளா் அப்துல்ரஷீத் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவா் டாக்டா் முஹம்மதுபைசல், மகளிர் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் இஸ்மாயில்ஜாஸ்மின், பல் மருத்துவா் டாக்டா் மைதீன்அபுதாஹீா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் டாக்டா் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவா்கள் தலைமையில் மருத்துவ குழுவினா் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினா். முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் கே.எம்.எஸ். மருத்துவமனையின் ஹெல்த் அட்டை வழங்கப்பட்டது.

அதன் மூலம் கே.எம்.எஸ். மருத்துவமனையின் சிகிச்சை சர்வீஸ் அனைத்திலும் 25சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி அப்துல்மஜீத் ஓருங்கிணைத்து செய்திருந்தார்.

Tags:    

Similar News