உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா கடத்தல் வழக்கு; குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Published On 2022-07-30 10:33 GMT   |   Update On 2022-07-30 10:33 GMT
  • இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர்.
  • 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து மேலக்காட்டை சேர்ந்தவர்சரபோஜி ராஜன் (வயது 52), வெளிப்பாளையத்தை சேர்ந்தவர்இளமாறன் (46) .

இவர்கள் சிலருடன் சேர்ந்து இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்தநெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு சொகுசு கார், சுமார் 147கிலோ கஞ்சா பிடிபட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரபோஜிராஜன், இளமாறன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி சரபோஜிராஜன் ,இளமாறன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News