உள்ளூர் செய்திகள்
அச்சு வெல்லத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்
- வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை அறிவித்ததற்கு பாராட்டுக்கள்
- அச்சு வெல்லத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை அறிவித்ததற்கு பாராட்டுக்கள்.
பாபநாசம் தாலுகா வீரமாங்குடி கிராமத்தில் கரும்பு சாகுபடி அச்சு வெல்லம் தயாரிப்பில் தமிழக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த அச்சு வெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி.
மேலும் அச்சு வெல்லத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடையிலும் விற்பனை செய்ய வேண்டும். பள்ளியக்ரஹாரம் முதல் கும்பகோணம் வரை சேதமடைந்து காணப்படும் சாலைகளை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.