உள்ளூர் செய்திகள் (District)

குன்னூரில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

Published On 2023-05-13 08:55 GMT   |   Update On 2023-05-13 08:55 GMT
  • போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
  • தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, வெலிங்டன் இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி மற்றும் போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.அவற்றை கடத்தி வந்த வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி (45), அப்துல் மஜீத் (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா வாங்கி வந்து குன்னூரில் விற்பனை செய்ய திட்டமிருந்தது தெரியவந்தது.

Tags:    

Similar News