உள்ளூர் செய்திகள் (District)

சுகாதாரதுறை அதிகாரிகள் அசைவ உணவங்களில் அதிரடி ஆய்வு செய்தனர்.

உணவகங்களில் சுகாதாரதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2023-09-21 10:13 GMT   |   Update On 2023-09-21 10:13 GMT
  • சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்தார்.
  • பாபநாசம் பகுதிகளில் அசைவ உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பாபநாசம்:

சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்த சார்பில் சுகாதா ரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து பாபநாசம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் சுகாதாரத்துறை ஆய்வாளர் பரமசிவம், சுகாதார துறை மேற்பார்வையாளர் நாடிமுத்து, ஆகியோர் பாபநாசம் பகுதியில் உள்ள பல்வேறு அசை உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது உணவுகளில் கெட்டுப்போன கோழி இறைச்சிகள், மீன் இறைச்சிகள் உள்ளதா எனவும், தேதி முடிவுற்ற பயன்படுத்த முடியாத பொருள்கள் நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சுகாதார முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News