உள்ளூர் செய்திகள்

பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது

Published On 2022-10-05 10:11 GMT   |   Update On 2022-10-05 10:11 GMT
  • புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.
  • 1,380 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஹூசைன், 31, சவுகத்துல்லா, 48, காவேரிப்பட்டணம் கனகராஜ், 42, குண்டியல்நத்தம் சீனிவாச கவுடா, 70, ஊத்தங்கரை ரவி, 46, சிவம்பட்டி சங்கர், 55, சாமல்பட்டி மகபூப் ஜான், 72, கல்லாவி சந்திரா, 50, சிங்காரப்பேட்டை காதர் உசேன், 63, ஆகிய, 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 1,380 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News