உள்ளூர் செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் உயிரை மாய்த்த கூலி தொழிலாளி

Published On 2023-03-25 10:17 GMT   |   Update On 2023-03-25 10:17 GMT
  • திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
  • மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு (வயது28), இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரகு இறந்தார்.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News