உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் நர்சிங் மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்

Published On 2023-05-03 09:31 GMT   |   Update On 2023-05-03 09:31 GMT
  • பிரியங்கா வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை பீளமேடு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 23). நர்சிங் மாணவி. சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

இது குறித்து பிரியங்காவின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.

சாய்பாபா காலனி அருகே உள்ள கருணாநிதி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (18). இவர் பி.பி. வீதியில் உள்ள கவரிங்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் காயத்ரி (26). இவரது தாய் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் காயத்ரி தங்கி இருந்தார். சம்பவத்தன்று திடீரென அவர் மாயமாகி விட்டார். அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News