உள்ளூர் செய்திகள்

கடலூரில் 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-12-02 08:46 GMT   |   Update On 2022-12-02 08:46 GMT
நள்ளிரவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை தந்தை கண்டித்துள்ளார்.

கடலூர்:

கடலூர் வன்னியர்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது பள்ளி மாணவி நேற்று இரவு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது தந்தை பள்ளி மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமடைந்த மாணவி வீட்டில் உள்ள அறையில் தூக்கில் ெதாங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News