உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் தண்ணீர் டிரம்மில் விழுந்து வாலிபர் பலி

Published On 2023-01-31 10:06 GMT   |   Update On 2023-01-31 10:06 GMT
  • கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
  • சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தகிரி

கோத்தகிரியை அடுத்த மேல் அனையட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் கணவர் இறந்த நிலையில் தனது 2 மகன்களான சஞ்சீவ் (வயது28) மற்றும் விஷ்ணு (வயது23) ஆகியோருடன் அதே பகுதியில் வாழந்து வருகிறார்.

வசந்தாவின் மூத்த மகனான சஞ்சீவ் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். விஷ்ணு கோவை பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். சஞ்சீவிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதால் அவர் வேலைக்கு சரியாக செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வசந்தா விழாவிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். வீட்டில் சஞ்சீவ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து காலை சஞ்சீவின் சகோதரரான விஷ்ணு கோவையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. பின்னர் விஷ்ணு வீட்டின் வெளியில் வைக்கப்படும் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது சைமயல் அறையில் இருந்து தண்ணீர் டிரம்மில் சஞ்சீவ் தலைகீழாக விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சீவ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக விஷ்ணு அவரது தாயார் வசந்தாவிற்கும் கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன், சஞ்சீவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News