உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அ.தி.மு.க சார்பில் ஏழை மக்களுக்கு வேட்டி-சேலை

Published On 2023-03-12 09:15 GMT   |   Update On 2023-03-12 09:15 GMT
  • கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  • சார்பு அணியினர், மகளிர் அணியினர், கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வண்ணாரபேட்டை, மேல்கோடமப்பந்து, வண்டிசோலை ஆகிய வார்டு பகுதிகளின் கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பா ட்டில் பிறந்தநாள் விழா கொண்டா டப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் தலைமை தாங்கி கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். ெதாடர்ந்து ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ச்சு ணன், கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெ யசீலன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி நகர செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பி னருமான அக்கீம்பாபு மற்றும் ஒன்றியசெ யலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூ ராட்சி செயலாளர்கள் சார்பு அணியினர், மகளிர் அணியினர், கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News