உள்ளூர் செய்திகள்

பலியான சின்னபாப்பா .

பாலக்கோட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

Published On 2022-07-25 09:30 GMT   |   Update On 2022-07-25 09:30 GMT
  • மூதாட்டி மீது பஸ் மோதியது.
  • பேருந்து சக்கரம் ஏறி நசிக்கியத்தில் சின்னப்பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலை 9 மணி அளவில் அரசு பஸ் ஒன்று பஸ் நிலையத்துக்குள் நுழைந்தது.

அப்போது எதிர்பா ராத விதமாக மணியக்கா ரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சின்னபாப்பா (வயது65) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டியின் தலை மீது பேருந்து சக்கரம் ஏறி நசிக்கியத்தில் சின்னப்பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னப்பாப்பாவின் உடலை கைப்பற்றி உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News