உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதம்

Published On 2023-09-08 10:26 GMT   |   Update On 2023-09-08 10:26 GMT
  • காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  • பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கும் தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்டுள்ளபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

கௌரவத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

செயலாளார் வெங்கடேசன், பொருளாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயலாளர் கோத ண்டபாணி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

உண்ணாவிரதத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து மாலை வரை உண்ணாவிரதம் நடந்தன.

இதில் நிர்வாகி புகழேந்தி, பொறுப்பாளர்கள் சுதா, சத்தியா, பிரபாவதி, மஞ்சுளா, கலையரசி, தனச்செல்வி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை , அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News