உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்

Published On 2022-12-05 09:52 GMT   |   Update On 2022-12-05 09:52 GMT
  • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
  • ஒரிரு தினங்களுக்கு முன்பு நீர் பனிப்பொழிவு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு விதவி தமா ன காலநிலை நிலவி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஒரிரு தினங்களுக்கு முன்பு நீர் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலுடன் கூடிய பனிமூட்டம் காணப்பட்டு வந்தது.

இதன் காரணமாக பகல் நேரங்களில் கடும் வெயிலும் மாலை முதல் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்ட துவங்கியது.

இரவு முழுவதும் கடும் குளிர் நிலவியது. காலையிலும் குளிர் காணப்பட்டது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்வோர் அவதி அடை ந்தனர். குறிப்பாக விவசாய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுதவிர சிலர் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்ந்த படி நின்று கொண்டிருந்தனர்.

மேலும் கம்பளி, சுவர்ட்டர் ஆடைகளை அணிந்து கொண்டு குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டிருந்தனர். கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News