உள்ளூர் செய்திகள் (District)

சிவசுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா

Published On 2023-11-14 09:52 GMT   |   Update On 2023-11-14 09:52 GMT
  • விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது
  • இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது.

தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா இன்று காலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

தொடர்ந்து யாகசாலை–யில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதை அடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கி–யது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தினமும் 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற உள்ளது.

 விழாவின் முக்கிய நாளான வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப் பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணியசாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வான வேடிக்கை யுடன் சூரசம்ஹார விழா வும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சூரபத்மணை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடக்கிறது.

இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், தொடர்ந்து இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி, அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தி னர் செய்து வருகிறார்கள்.

Similar News