திருவட்டார் அருகே தொழிலாளி தவறி விழுந்து சாவு
- வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பாததால் தாய் தேடியபோது ஓடைக் கரையில் விழுந்து கிடந்துள்ளார்.
- திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள பாலத்தோப்புவிளை மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகன் சாம்ராஜ் (வயது 38), தொழிலாளி.
இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த 24-ந் தேதி காலை சாம்ராஜ் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.
இரவு வெகுநேரமாகியும் சாம்ராஜ் வீட்டுக்கு வராததால், அவரது தாயார் ரோசம்மாள் பல இடங்களிலும் தேடினார். அப்போது அரசுபிள்ளை அருகே உள்ள ஓடைக் கரையில் சாம்ராஜ் விழுந்து கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ரோசம்மாள், அங்கு சென்று சாம்ராஜை மீட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனாலும் உடல்நலம் சீராகாததால், 25-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சாம்ராஜ் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் ரோசம்மாள், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.