உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம் 

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2023-01-14 09:50 GMT   |   Update On 2023-01-14 09:50 GMT
  • ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
  • கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறை மாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி:

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறை மாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார். முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ், மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பங்குஅருட்பணி பேரவை துணை தலைவர் எட்வின் சேவியர் செல்வின், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் உள்பட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News