உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் டியூசனுக்கு சென்ற மாணவி மாயம்
- வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார்
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
நாகர்கோவில்:
நாகர்கோவில் காமராஜர்புரத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, அந்த பகுதியில் டியூசன் படிக்க சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பி வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், டியூசனுக்கு சென்று கேட்ட போது மாணவி டியூசனுக்கு வர வில்லை என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்து மாணவியின் தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் மாணவி பற்றி எந்த தகவலும் இல்லை. இதையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி, கடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.