உள்ளூர் செய்திகள் (District)
- இரணியல் போலீசில் புகார்
- இரணியல் போலீசார்மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே காரங்காடு அடுத்த மொட்ட விளையை சேர்ந்தவர் ஜெயசேகர் (வயது 56). இவரது மகள் ஜெயஸ்ரீ (23). லேப் டெக்சினீயன் முடித்துவிட்டு நாகர்கோவி லில் உள்ள ஒரு தனியார் லேபில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று லேபிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ஜெயஸ்ரீ பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங் களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து ஜெயசேகர் இரணியல் போலீசில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.