உள்ளூர் செய்திகள் (District)

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்

Published On 2022-06-13 07:35 GMT   |   Update On 2022-06-13 07:35 GMT
  • ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்பவர்
  • பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

கன்னியாகுமரி :

நாகர்கோவில் அருகே சொத்தவிளை புத்தளத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மகன் மணி செல்வன் (வயது 30).

இவர் சென்னையில் ஒரு ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மண்டைக்காடு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.

மணவாளக்குறிச்சியை கடந்து சாத்தன்விளையில் செல்லும்போது, இவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற நெய்யூர் பெருங்கோடை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News