உள்ளூர் செய்திகள் (District)

நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் வந்த 2600 டன் ரேசன் அரிசி

Published On 2022-07-12 08:07 GMT   |   Update On 2022-07-12 08:07 GMT
  • தெலுங்கானாவில் இருந்து 42 வேகங்களில் வந்தது.
  • ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தெலுங்கானாவில் இருந்து 42 வேகங்களில் 2600 டன் ரேஷன் அரிசி இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது. சரக்கு ரெயிலில் வந்த ரேஷன் அரிசியை ஊழியர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News