உள்ளூர் செய்திகள் (District)

புதுக்கடை அருகே இளம்பெண் வீட்டில் இருந்து 2-வது முறையாக மாயம் - போலீசார் விசாரணை

Published On 2022-07-19 07:18 GMT   |   Update On 2022-07-19 07:18 GMT
  • அந்தோணி பலரிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கியதால் கடன் தொல்லையால் அவதிபட்டுள்ளார்
  • மீண்டும் குழந்தைகளை விட்டுவிட்டு, அஜிதா மட்டும் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்

கன்னியாகுமரி :

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை கடற்கரை கிராமம் 17-ம் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 37). இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு அஜிதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அந்தோணி பலரிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கியதால் கடன் தொல்லையால் அவதிபட்டுள்ளார். கடன் கொடுத்தவர்கள் வீட்டில் தொல்லை கொடுத்ததால் கடந்த சில மாதம் முன்பு அஜிதா அவரது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார்.

இது தொடர்பாக அப்போது புதுக்கடை போலீசில் புகார் செய்ப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் மாயமானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகளை விட்டுவிட்டு, அஜிதா மட்டும் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். கடன் தொல்லையால் தன்னிடம் சொல்லாமல் வீட்டில் இருந்து மனைவி மாயமாகியுள்ளதாகவும், எனவே மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தர வேண்டும் என மீண்டும் அந்தோணி புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News