உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

Published On 2022-08-19 08:19 GMT   |   Update On 2022-08-19 08:19 GMT
  • கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
  • குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார். கட்டிட தொழிலாளி. இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது.

ஆணையடி செங்கோடி பகுதியை சேர்ந்த மோசஸ் (வயது 33) என்பவர் இங்கு கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் கட்டிடத்தின் மேல் பகுதியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கடந்த 2 நாட்களாக மோசஸ் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News