உள்ளூர் செய்திகள்

இரணியல் விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு

Published On 2022-08-17 09:35 GMT   |   Update On 2022-08-17 09:35 GMT
  • பலி எண்ணிக்கை 3 ஆனது
  • விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரா ஜசேகர் (வயது 40).

பொன்மனை ஈஞ்சக் கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (34). இருவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வருகின்றனர். இருவரும் முட்டத்தில் முள்வேலி அமைக்கும் பணியை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பினர். பைக்கை ராஜசேகர் ஓட்டி னார்.

இருவரும் இரணியலில் இருந்து தக்கலை நோக்கி செல்லும் போது, எதிரே நெய்யூர் ஆத்திவிளை காமராஜர்தெருவை சேர்ந்த பிரதீஷ் (28) பைக்கில் வந்தார். அவரது பின்னால் நெய்யூர் பால் தெருவை சேர்ந்த ரெஜு (38) அமர்ந்திருந்தார். இரணியல்கோணம் ரயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரதீஷ், ராஜ சேகர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ரெஜுவை சுங்கான் கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், ராஜனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதில் ராஜன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News