உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2022-10-05 08:18 GMT   |   Update On 2022-10-05 08:18 GMT
  • இவருக்கு அதிக கடன் சுமை இருந்ததாக தெரிகிறது
  • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் வளன்நகரை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 38). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விஜயராஜிக்கு அதிக கடன் சுமை இருந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயராஜ் கண்டன்விளை அடுத்த தெற்கு தோப்புவிளையில் உள்ள குடும்ப வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த விஜயராஜ் குடும்ப வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் அழகப்பபுரத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் விஜயராஜ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் மகேந்திரன் (39) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News